Wednesday, March 31, 2010

நீங்களுமா

எனக்கு ஒரு நண்பர் இருக்காருங்க.. எனக்கும் மத்தவங்களோட இருக்கிற நம்பிக்கையை காட்டிலும் இவர் மேல் ஒரு படி நம்பிக்கை.

என்னை பொறுத்தவரையில் நண்பர்கள் எல்லாரும் ஒரே மாதிரி ஆக இருப்பதில் விருப்பம் இல்லை. வேற்றுமைகளுடன் ஒற்றுமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நம்புபவன் நான்.



ஓரிருவருக்கு மாத்திரம் தெரிஞ்ச சில விசயங்களில ஓரிரு விஷயம் இந்த நண்பருக்கும் தெரியும். என்னதான் பிரச்சினை வந்தாலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இந்த ரகசியமெல்லாம் பரகசியம் ஆக்கமாட்டார் என்றுதான் உறுதியாக நம்பினேன்.

இருந்தாலும் ஏறத்தாள 9 மாதங்களுக்கு முன் பலருக்கு இந்த ரகசியத்தை சொல்லியிருந்தார். ஓரிருவர்தானே என்று இருந்துவிட்டேன். (அவரைத்தவிர வேறு யாரும் சொல்லியிருக்க முடியாது)

ஆனா இன்று இந்த ரகசியத்தெல்லாம் அவர் காத்துல விட்டுடாரு. காத்துலயும் சொல்லிட்டாரு..

எனக்கு அவர்கிட்ட கேக்க இருக்கிறது ஒரு சொல்தான்

நீங்களுமா?

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/