Tuesday, April 13, 2010

இணையப்பாவனையில் வேற்றுக்கிரகவாசிகள்?!


பொது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சி பத்திரிகை இணையம் போன்றவற்றில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகள் நடப்பதுண்டு.

முதலில் அண்மைக்காலத்தில் நடந்த சில கணிப்புகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்று இல் கருத்துக்கணிப்பு நடந்தது. ஆனால் கடைசியில் வந்த முடிவும் கருத்துக்கணிப்பும் எதிரெதிரானவை. அதேபோல் தனியார் ஊடகங்களில் நடந்த கணிப்புகளின் நிலையும் இதுதான்.

பூச்சரம் இணையத்தளம் நடாத்திய ஊடகங்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் உண்மையை கூறுவதற்கு பதிலாக குழு மனப்பான்மையின் காரணமாக நியாயமான முடிவு கிடைப்பதை தடுத்து விட்டார்கள் என்றே கருதுகிறேன். இதன் காரணமாக இக்குழுவினருக்கு தம்மைப்பற்றிய விமர்சனத்தையும் மீள்பார்வையையும் செய்வதற்கு இருந்த வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

வெற்றி வானொலியில் நீங்கள் எதற்கு இணையத்தை பாவிக்கின்றீர்கள் என்றொரு கருத்துக்கணிப்பு. எல்லோரும் தம்மை saint ஆக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் எந்த நேரத்திலும் 500க்கும் அதிகமானோர் online இல் இருக்கும் தமிழ் இணையத்தளங்களை யாரும் சொல்லவில்லை. மிகப்பிரபலமான தமிழ் வலைப்பூவில் 50க்கும் அதிகமானோர் online இருப்பதையாவது கண்டிருக்கிறீர்களா?எல்லோரும் மின்னஞ்சலுக்கும் செய்திக்கும் பயன்படுத்தினால் இந்த இணையங்களில் இருக்கும் 500 க்கும் அதிகமானோர் வேற்றுக்கிரகவாசிகளா?

0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/