Sunday, December 6, 2009

பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்



இன்று பாபர் மசூதி உடைக்கப்பட்ட நாள்.












இது தொடர்பாக இயக்குனர் அமீர் கடந்த வருடம் குமுத்த்திற்கு அளித்திருந்த பேட்டியின் ஒரு பகுதி..

ஈழப் பிரச்னைக்கு நான், நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு குரல் கொடுத்துப் போராடியவர்கள், நம் நாட்டில் நடந்த மும்பைத் தாக்குதலுக்குக் குரல் கொடுத்துப் போராடவில்லை. மும்பைத் தாக்குதலில் கூட பணக்காரர்கள் இருந்த ஹோட்டலில் நடந்த தாக்குதல் பற்றிதான் செய்திகள் பெரிதாக வந்தன. ரயில் நிலையத்தில் சுடப்பட்டு இறந்த அப்பாவி ஏழைகளைப் பற்றி யாரும் பேசவில்லை. இந்தத் தாக்குதலுக்காக பதவியை ராஜினாமா செய்தவர்கள் குஜராத் கலவரத்தின்போது ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு ஏன் பொறுபேற்கவில்லை? இன்றைக்கும் டிசம்பர் ஆறாம் தேதி வந்தால் நம்மை நடுரோட்டில் உட்கார வைத்து உடைமைகளை அவிழ்த்து போலீஸ் சோதனை செய்கிறார்களே. அந்த பாபர் மசூதியை இடித்த போது ஏன் யாரும் ராஜினாமா செய்யவில்லை? அப்போது நடந்த கலவரத்தில் எத்தனை ஆயிரம் மக்கள் பலியா-னார்கள்? இலங்கையில் நடக்கும் அநியாயத்தைச் சொல்லும் போது, நம் நாட்டில் நடக்கும் அநியாயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒவ்வொரு இந்திய-னுக்கும் இதைக் கண்டிக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சுதந்திரம், உரிமை கூட இல்லை-யென்றால் வாழ்வது எதற்கு? குமுதம் 31.12.2008

இவ்வொரு வருட காலத்தில் என்ன மாற்றம் இடம்பெற்றுள்ளது என்று இந்திய வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்..

பாபர் மசூதி உடைக்கப்படும் படங்களைக்காண..
பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை தாக்கல் - BBC
மறக்க முடியாத பாபர் மசூதி - ஒரு பார்வை


தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் டிசம்பர் 6 போராட்டம்!


0 comments:

Post a Comment

இது என்ன கொடும சார் இன் mobile friendly version ஆகும்.  கணணித்திரையில் பார்க்க http://eksaar.blogspot.com/